அன்பு இக்கா.
ஆறு பகுதிகளை இப்போ தான் வாசிச்சேன்.
இருபது ஆண்டை ,ஒரு குறுக்கு வெட்டு பார்வையாக எழுதி இருந்தது சிறப்பு.
படிப்பு ,பயிற்சி முடிந்து இப்படி வேலைக்கு அலையும் நாட்களின் அவஸ்தையை சொல்லிவிடவே முடியாது. வளமான வாழ்வுக்காகதான் நம் கனவுகளும் வாழ்க்கையும், அதில் இந்த வேலை தேடும் படலமும், பின்னர் வேலையை கைக்கொள்ளும் காலம் வரை ஒருவித உலகியல் அலைகழிப்பை என் அனுபவித்தின் மூலம் வாசிக்கையில் அலைகழிப்பை உணரமுடிகிறது .
எத்தனை பணம் இருந்தாலும் பசி நேரத்தில் கிடைக்கும் அந்த உணவின் ருசி யின் மணம் என்றுமிருக்கும், அப்படி இந்த கப்பல்காரன் வாழ்வில் மறக்கமுடியாதது அந்தகண்டிப்பான அதிகாரி யிடம் பெற்ற சான்விச்சமும் தான்..எனக்கே அந்த பசியும் , கவரை தந்தவுடன் பெரும் பசியுடன் தின்னும் ஆவலுடன் கண்ணீரே வந்துவிட்டது.
என்னால் இப்போ, சுனிதாவையும், அம்மாவையும்,இரண்டு வயது சாலின் ஐம் காலத்தின் பின்சென்று இக்கா போலவே நின்று பார்த்துகொண்டிருந்தேன்.
வாழ்க வளர்க இக்கா
விஜி ப்ரியா,சிங்கப்பூர்.
ஷாகுல்
இருபது ஆண்டு நிறைவு தொடரில்
ஐஜின் வாசித்தேன்
உங்களின் வேலையை நினைத்தால் ஆச்சரியமாய் இருக்கிறது. ஒவ்வொரு முறை கப்பலுக்குப் போகும்போதும் புதிய புதிய பணியாளர்கள், புதிய கப்பல்கள். நிலத்தில் வேலை செய்யும்போது அது கிடைக்காது. இன்னும் நிரந்தரப்பணியாளர்களோடு வேலை செய்யும்போது ஒரு நிமிடம்கூட மாற்றம் இருக்காது. ஒரேமாதிரிதான் இருக்கும். ஏறககுறைய உலகின் அத்தனை நாட்டு ஆட்களோடும் வேலை செய்திருக்கிறீர்கள். அத்தனை விதமான உணவையும் உண்டிருக்கிறீர்கள். அடுத்தவேளை உணவை பணியாளர்களுக்கு தன் கையில் கொண்டுவந்த கேப்டன் முதற்கொண்டு மாதக்கணக்கில் பழைய உணவுகளை சூடுபடுத்திக்கொடுத்த அடுக்களைப்பணியாளர்கள் வரை மனிதர்களின் அத்தனை நிறத்தையும் ஒரே வாழ்க்கையில் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
டெய்சி.
No comments:
Post a Comment