Wednesday, 4 February 2026

டாலஸ்புரம் 2

 



    செந்திலின் வீட்டை சுற்றிலும் கடந்த வாரம் அடித்த பனிப்புயலின் ஐஸ் இன்னும் உருகாமலே இருந்தது.காலையில் உணவுண்டபின் செந்திலின் மகனை ஒரு வகுப்புக்கு கொண்டு விட்டபின். இந்திய (ஹரேலி)கடை ஒன்றுக்கு சென்று பொருட்களை வாங்கினோம். சின்ன வெங்காயம் முதல் அதிரசம் வரை இங்கே கிடைகிறது.




Frisco வில் இருக்கும் நூலகத்திற்கு சென்றோம். இரண்டு வயது பூர்த்தியாகத குழந்தைக்கு பெற்றோர் புத்தகத்தை கையில் கொடுத்து படங்களை காட்டி கொடுக்கின்றனர்.மிகப்பெரிய நூலகம்.ஒருவர் ஐம்பது புத்தகங்கள் வரை ஒரே நேரத்தில் எடுத்து செல்ல முடியும். சைலண்ட் ரூம் தனியாக இருக்கிறது.மாணவர்கள் அதை பயன்படுத்துகின்றனர். நூல்களை புனைவு, அ புனைவு, வரலாறு,புவியியல் தன் வரலாறு என பிரித்தே வைத்துள்ளனர்.




நமக்கு தேவையான நூலை கணினியில் தேடலாம். ஆசிரியர் ஜெயமோகனின் Stories of true இருக்கிறதா என தேடினோம். அங்கே இல்லை. அந்த சிறுகதை தொகுப்பை அங்கே வைக்க ஆலோசனை சொல்லலாம் என கூறினார் செந்தில்.



 அருகிலிருந்த உணவகத்தில் ஒரு மசாலா சாயா குடித்துவிட்டு,சப்பாத்தியும்,கறியும் வாங்கிகொண்டோம்.இங்கே உள்ள அனைத்து சிறிய,பெரிய வணிக வளாகங்களிலும் ஒன்றிரண்டு இந்திய கடைகள் இருக்கிறது(சாய் பிளவர் ஷாப்,சிந்து சினாக்ஸ்). வகுப்பு முடிந்து காத்திருந்த மகன் சித்தார்த்தை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தோம்.காலையில் செந்திலின் மனைவி சமைத்திருந்த பொங்கல் சாப்பிட்டபின் எனக்கு பசிக்கவேயில்லை.

  அவரது மகள் சாதனாவுக்கு பாலிவுட் நாட்டிய வகுப்பு அதற்கு அழைத்து சென்றுவிட்டு வால்மார்ட் சென்றுவிட்டு திரும்பும்போது சாதனாவின் வகுப்பு முடிந்திருந்தது. மூன்று மணி ஸ்லாட்டுக்கான மாணவர்கள் குவிந்துவிட்டனர். இந்திய பெண் மாஸ்டர் டான்ஸ் கற்றுகொடுக்கிறார்.

 மதியம் மூன்று மணிக்குமேல் பசியில்லாமலே சாப்பிட்டேன்.சித்தார்த் பள்ளி மாணவர்களுடன் நாடக குழுவில் ஸ்டேஜ் மேனேஜராக இருக்கிறார். நாடகத்தின் முக்கிய திரையிடலுக்காக கிளம்பி சென்றார். இங்குள்ள கல்வி முறையில் பாடத்திற்கு வெளியே கலை,இலக்கியம்,விளையாட்டு என அதிகம் கற்றுகொள்ள பிள்ளைகளை பள்ளிகளும்,பெற்றோர்களும் ஊக்குவிக்கிறார்கள்.

    பள்ளி கல்வி முடிந்து கல்லூரி செல்லும்போதே திறைமையானவர்களாகவே நுழைகிறார்கள்.இங்குள்ள கல்விமுறை அப்படி.




மாலையில் நண்பர்கள் நாகர்கோவில் கணேஷ்,பிரதீப் மற்றும் பாலாஜி சந்திக்க வந்திருந்தனர். கப்பல் காரன் டைரியை வாசித்தவர்கள். எனது முதல் வாசகர் சந்திப்பு என்றே சொல்லலாம்.




 ஜெயமோகன்,கப்பல் பணி,தமிழக அரசியல் என இரண்டு மணிநேரம் உரையாடியபின் நண்பர்கள் விடைபெற்று சென்றனர். நாங்கள் பேசிக்கொண்டிருந்துவிட்டு இரவு பன்னிரெண்டு மணிக்கு தூங்க சென்றோம்.

காலையில் தொழுகைக்குப்பின் செந்திலின் தயாராக வைத்திருந்த டீ குடித்தேன். காலை உணவுக்குமுன் அவரது வீட்டில் பூஜையறையில் அதுவே அவரது அலுவலகம் அனைவரும் அமர்ந்து தியானம் செய்தோம். அவர்களுக்கு ஒரு தியான அறிமுகம். மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் அடிப்படை தியான பயிற்சிகளை டாலஸ் நண்பர்களுக்கு இலவசமாக சொல்லி தருவதாக உறுதியளித்தேன்.



    நானும் செந்திலும் அவர்களின் குடியிருப்பு பகுதியான windsong raanch community பகுதியில் சுற்றி வந்தோம் இரண்டாயிரம் ஏக்கர் கோழி பண்ணையாக இருந்த இடம் தான் இப்போது குடியிருப்பு பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. இங்கே பரந்து விரிந்த நிலம் அதிகமாக இருப்பதால் இருவழி சாலை போல அகலமான தெருக்கள். குடியிருப்பில் எங்கும் கடைகளே இருக்காது. ஆசிரியர் ஜெயமோகன் நண்பர்களுடன் வந்து நடந்து போய் டீ குடிக்க விரும்பினால் முடியாது. சில மைல்கள் காரில் பயணித்து வணிகவளாகம் சென்றால்தான் ஒரு காப்பி கிட்டும்.



  இந்த குடியிருப்பு வாசிகள் பயன்படுத்த நீச்சல்குளம,சமைத்து உண்ண பார்பிகியூ அடுப்புகள் அனைத்தும் கம்முனிடி செய்து கொடுத்துள்ளது. குளிர் காலமாதலால் யாரும் இப்போது அங்கே வரவில்லை.

   நண்பர் கணேஷ் மதிய உணவிற்கு வீட்டிற்கு அழைத்திருந்தார். தை பூசம் ஆதலால் சைவம் மட்டுமே என சொல்லியிருந்தார். செந்திலின் வீட்டிலிருந்து மிக அருகிலேயே கணேசின் வீடு. சப்பாத்தி,நெய் சோறு,பன்னீர் டிக்கா,வெஜிடபிள் குறுமா,தயிர் உள்ளி என சுவையாக உண்டபின் அரிசி கீர் ஒன்றும் தந்தார்.

கணேஷின் குடும்பம்


   வீட்டிலிருக்கும் ஒரு வயது குட்டியான ஸ்கை எனும் பெண் நாயை அறையில் பூட்டியிருந்தனர். கணேசின் மகன் ஆதித்யா ஸ்கையை பார்க்க அழைத்தான். கணேஷ் அறைக்கு வெளியே கொண்டுவந்தார்.

   நாங்கள் விடைபெற்றோம்.2012 இல் என்னுடன் தோஹா – ஹூஸ்டன் விமானத்தில் பயணித்த பாலக்காட்டு மாமி உஷா இங்கே ப்ரிஸ்கோவில் வசிக்கிறார். “சாயா குடிச்சிட்டு போலாம் ஆத்துக்கு வாங்கோ”என அழைத்திருந்தார். அவரது மகன்கள் சிறுவர்களாக இருக்கும்போது சேட்டை பசங்களாக விமானத்தில் பார்த்ததுபதினான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. மிக ஆவலோடு சந்திக்க காத்திருந்ததால் உஷாவின் இல்லத்திற்கு சென்றோம்.

பிங்க் ஆடை உஷா கண்ணாடி அணிந்தவர் ராமசந்திரன்


  உஷாவின் வீட்டிற்கு முன் ஐஸ் இன்னும் உருகாமல் இருந்ததால் மிக கவனமாக வரச்சொன்னார். உஷாவின் கணவர் ராமச்சந்திரனை இப்போது தான் பார்க்கறேன். மகன் தேஜஸ் கல்லூரியில் படிக்கிறான்.இளையவன் பள்ளியிலிருந்து பேண்ட் வாசிப்பதற்காக வேறு ஊருக்கு சென்றிருந்தான். நல்ல பில்டர் வேண்டும் என கேட்டிருந்தேன். சுவையான காபியை தந்தார் உஷா.

   ஏழு மணிக்கு மேல் அங்கிருந்து புறப்பட்டோம்.பிள்ளைகள் வீட்டில் தனியாக இருப்பதால் போனில் இன்னும் ஒரு மணிநேரம் கழித்து வருகிறோம். பொறுத்துக்கொள்ள முடியுமா என சியாமளா கேட்டார். அவர்கள் ஒத்துகொண்டதால் இங்கிருக்கும் ஹனுமான் கோயில் செல்வது என முடிவு செய்தோம்.

மேலும் .....

நாஞ்சில் ஹமீது,

04- feb - 2026

sunitashahul@gmail.com

No comments:

Post a Comment