இளம் எழுத்தாளர் சஜீ ஈராக் போர்முனை அனுபங்கள் குறித்து எழுதிய குறிப்பு.
மணவாளக்குறிச்சியை பூர்வீகமாகக் கொண்ட அண்ணன் ஷாகுல் ஹமீதின் "ஈராக் போர்முனை அனுபவங்கள்" எனும் இந்நூல் கடந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் யாவரும் பதிப்பாக வெளிவந்துள்ளது. ஏழ்மைக் காரணமாக இளம் வயதில் அரபு நாட்டுக்கு வேலைக்குச் சென்ற தன்னுடைய வாழ்வனுபவங்களைப் போர்முனையில் நின்று வாழ்ந்து எழுதியுள்ளார் எழுதியுள்ளார் நாஞ்சில் ஹமீது. தினம் தினம் பொழியும் குண்டு மழைக்கு நடுவே அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு உணவு தயார் செய்து கொடுக்கும் ஓர் எளிய இளைஞனாக மரணத்திற்கும் வாழ்விற்கும் இடையே அவர் நடத்தியிருக்கும் போராட்டம் ஒவ்வொரு பக்கத்திலும் நிறைந்தொழுகும்.
தன் கைப்புண்ணியத்தில் சமைக்கும் உணவை தான் உண்ணுவேன் என்று எந்த உத்தரவாதமும் இல்லாத ஓர் சூழலில் ஏழ்மை வாழ்க்கையிலிருந்து முன்னேற துடிக்கும் ஓர் இளைஞன் தான் தேர்ந்தெடுத்த சவாலான பணிக் குறித்தும், அதிலுள்ள இக்கட்டான ஆபத்துக் குறித்தும் இந்நூலில் விரிவாக எழுதியுள்ளார்.
ஓர் இக்கட்டான சூழ்நிலையில் தன்னுடைய கடவுச்சீட்டு உள்பட அனைத்துச் சான்றிதழ்களும் தீக்கிரையானதும், செல்வம் சேர்க்கச் சேர்த்த கல்வி தடமே இன்றி அழிந்ததும், குண்டுவெடிப்பில் தன்னுடைய நண்பன் படுகாயம் அடைந்ததும், உலகமெங்கிலுமிருந்து கிடைத்த நல்ல நட்புக்கள் குறித்தும் இந்நூலில் உருக்கமாக பதிவு செய்துள்ளார். அதோனோடு சதாமை பற்றியும், அமெரிக்க இராணுவத்தைப் பற்றியும், போர் காரணமாக ஈராக்கின் திக்ரித், பாக்தாத் போன்ற நகரங்களின் வாழ்க்கை சூழலையும் விரிவாக கண்முன்னே காட்சிப்படுத்தியுள்ளார்.
முப்பது நான்கு தலைப்புகளில் எழுதப்பட்ட இந்நூல் ஓர் பெரும் நாவலுக்கான களத்தைக் கொண்டுள்ளதோடு எளிய வாசிப்பிற்கும் ஏதுவாகவும் அமைந்துள்ளது.
வாழ்த்துக்கள் அண்ணா.
ஈராக் போர்முனை அனுபவங்கள்
ஆசிரியர் - நாஞ்சில் ஹமீது
பதிப்பகம் - யாவரும்
விலை - ₹ 250
![]() |
| மூத்த எழுத்தாளருடன் சஜீ |

