Monday, 24 March 2025

லைலத்துல் கத்ர் - கடிதங்கள்

லைலத்துல் கத்ர் இரவு

லைலத்துல் கத்ர். இஸ்லாமிய நம்பிக்கைகளையும், வழிபாடுகளையும் எப்போதுமே அழகாய் எடுத்துச்சொல்வீங்க. ஒரு உண்மையான ஆன்மீகவாதி எந்த மதத்தில் இருந்தாலும் ஒரேபோல்தான் இருப்பாங்க. இப்ப வீடியோக்களில் ட்ரென்ட்டா இருப்பது இப்தார் உணவுப் பெட்டியை பிரித்து வைத்து சாப்பிடுவதுதான். நிறைய உணவகங்களில் அப்படி ஒரு ஏற்பாடு இருக்கிறது. பெரிய பெட்டிகளில் தனித்தனியான பிரிவுகளில் கொஞ்சம் கொஞ்சமாய் உணவு வகைகள் வைத்து அழகாய் பேக் செய்யப்பட்டு மினிமம் 500 ரூபாயில் இருந்து அதிகபட்சம் எவ்ளோ வேண்டுமானாலும் இருக்கலாம். ஒவ்வொருநாளும் ஒருத்தர் 500 ரூபாய் செலவுசெய்து நோன்பை முடிப்பது எவ்வளவு பேருக்கு சாத்தியம் என்று தெரியவில்லை. குடும்பம் முழுவதற்கும் நல்ல உணவை சமைத்தால்கூட அவ்வளவு ஆகுமா தெரியவில்லை. ஆனால் எல்லாரும் உணவைப்பிரித்து இது நல்லாருக்கு அது நல்லால்ல என்று சொல்லிக்கொண்டு சாப்பிட்டு வறுமையில் இருக்கும் மற்றவர்களை பெருமூச்சுவிட வைத்து இன்னும் பாவத்தைத்தான் சேர்த்துக்கொள்கிறார்கள் என்று தோன்றுகிறது.


டெய்ஸி. 



சகோதரி டெய்சி மிகச்சரியாக புரிந்து இருக்கிறார்.நோன்பின் மாண்பு வழக்கத்திற்கு மாறாக சீர்கெட்டு போய் இருப்பதை பல வகைகளில் உணர முடிகிறது. அனைத்து கடமைகளும் இறைவனுக்காகவே என்றாலும், நோன்பை அல்லாஹ் "அது எனக்கானது, அதற்கான கூலியை நான் நேரடியாக வழங்குவேன் என்கிறான்". நோன்பின் நோக்கங்களில் ஒன்று, உணவு இல்லாமல் வறுமையில் வாழ்பவர்களின் பசியை உணர்வது. இஃப்தார் நேரத்தில் அருந்தும் தண்ணிரில் கிடைக்கும் பரவசம், மகிழ்ச்சி மூலம், உண்ணக்கிடைக்காத ஒரு மனிதனுக்கு, ஒரு குவளை தண்ணீர் அல்லது ஒரு பிடி உணவு எவ்வளவு பெரிய பொக்கிஷம் என்று உணர வைக்கும். ஆனால்,  நோன்பு காலங்களில் இஃப்தார் ஒரு புது வடிவம் எடுத்து இருக்கிறது. இது நோன்பை வைப்பதன் நோக்கத்தையே சிதைக்கிறது. சகோதரி டெய்சிக்கு இருக்கும் தெளிவை இறைவன் இது போன்ற செயல்களில் ஈடுபடும் நோன்பாளிகளுக்கு வழங்க வேண்டும் . இறைவன் போதுமானவன்.


ஷேக் முகமது புருனே. 




முற்றிலும் உண்மை. ரமலானின் ஸஹர் மற்றும் நோன்பு திறப்பதை உணவு திருவிழா போன்று ஆக்கிவிட்டார்கள்.

 இது நபிவழிக்கு முற்றிலும் மாற்றமானது. எளிமையான உணவைக் கொண்டு நோன்பு வைக்க வேண்டும் நோன்பை திறக்க வேண்டும். ஆன்மீகத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் அதுவே நபியவர்கள் காட்டித் தந்த முறை நமக்கு என்றும் பயனளிக்கும் முறை.


வீண் விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை என்று குர்ஆன் கூறுகிறது.


நியாஸ், நாகர்கோவில்.




வியாபார நோக்கம் விளம்பரத்திற்காக ஏதேதோ செய்கிறார்கள்.

நோன்பு திறக்க பேக்கேஜ்கள் முறையை உணவகங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன

ஹைதராபாத் போன்ற ஊர்களில் இப்தார்க்கு வழங்கப்படும் ஹலீம் எனும் உணவு நோன்பாளி செல்வதற்கு முன் முடிந்து விடுகிறது(அவ்வளவு புக்கிங்). இன்றைய சமூகம் அனைத்தையும் சமூக ஊடகங்களில் வீடியோவாக வெளியிட நினைக்கிறது. நோன்பின் நன்மைகளை பெற ஏக இறைவன் அவர்களை மனதிருந்த செய்யட்டும்.


நாஞ்சில் ஹமீது. 

No comments:

Post a Comment