Thursday 5 September 2019

மழை


                       மழை.
 கடந்த மாதம் பனிரெண்டாம் தியதி ஊருக்கு வந்தபின் இது வரையில் கதிரேழுவதை காணக்கிடைக்கவில்லை .அதிகாலை தொழுகைக்கு கால் நடையாக பள்ளிக்கு சென்று வந்தபின் நான் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டைமாடியில் சிறிது நேரம் அமர்ந்திருப்பேன்.காலை பொழுதுகளில் வானம்  முகில் கூட்டங்களால் நிறைந்தே இருந்தது .அவ்வப்போது சிறு மழையும் தூறலும் .கடந்த வெள்ளிக்கிழமை முதல் மழை,நேற்று முன்தினம் முதல் மழை,மழை,மழை ,நேற்று பகலும் இரவும் விட்டு விட்டு வானை பிளந்துகொண்டு கொட்டியது ..இப்போதும் மழை பெய்துகொண்டு இருக்கிறது .மழை பெய்கையில் அதை விழி விரித்து காண்பது அக மகிழ்வு நீரின்றி இருந்த சானல்களில் வெள்ளம் புரண்டு ஓடுகிறது .
    நீரின்றி அமையாது உலகு .மழை பெய்யட்டும் .
ஷாகுல் ஹமீது ,
06-09-2019.

No comments:

Post a Comment