Saturday 25 March 2023

ரமலானில் ஒரு கெத்தெல் சாகிப்

 

                    .

    வடசேரி பள்ளிவாசலில் ஜும்மா தொழுதுவிட்டு வெளியே வரும்போது .

                      ஷமா ரெஸ்டாரன்ட் .

இன்ஷா அல்லாஹ் இவ்வாண்டு (2023) ரமலானில் ஸகர் உணவு  (அதிகாலை 3.30 முதல் 4.30 வரை) வடசேரி எம் எஸ் ரோட்டில் அமைந்துள்ள ஷமா ரெஸ்டாரன்ட்டில் வழங்கப்படும்.

                      பார்சல் கிடையாது

கட்டணம் செலுத்தி உணவு உட்கொள்ள வேண்டும் என நினைப்பவர்களுக்கு.விருப்ப கட்டணம் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.


    கீழ்க்கண்ட எண்ணில் முன்பதிவு செய்து ஒத்துழைக்குமாறு வேண்டுகிறோம் என இரு மொபைல் எண்களுடன்   ஒரு நோட்டீஸ் தந்தார்கள். கடந்த  வருடமும்  இதுபோல் ஷமா ரெஸ்டாரன்ட் ஸகர் உணவு வழங்கும் செய்தி அறிந்து போய் பார்க்க வேண்டும் என எண்ணினேன்.

"அது இல்லாதவர்களுக்கான உணவு  நீங்க அதை சாப்பிடக்கூடாது " என சுனிதா தடுத்து விட்டாள்

இன்று அதிகாலை அங்கு சென்று உணவு உண்ண வேண்டும் என நினைத்தேன்.வழக்கம்போல் சுனிதா "நீங்க போவாண்டாம்" என்றாள்.  ஸகர் உணவுக்கு வருபவர்கள்  போனில் முன்பதிவு  செய்து உதவுங்கள் என குறிப்பிட்டிருந்ததால். அந்த எண்ணில் காலையில் அழைத்தேன். அழைப்பை ஏற்கவில்லை இரண்டாவது எண்ணில் அழைத்தபோது தற்போது உபயோகத்தில் இல்லை என வந்தது.பலமுறை விடாமல்  முயற்சித்த போது மாலையில் "அஸ்ஸலாமு அலைக்கும்" என குரல் கேட்டது.


"ஸகருக்கு ரெண்டு பேரு சாப்பிட வாறோம்" என்றேன்.

"வாங்கோ" என்றார்.

" கட எங்க இருக்கு"

" வடசேரி  திருநவேலி  ரோட்டுல"என பதில் கிடைத்தது.

இளைய மகன் சல்மானிடம் சொன்னேன்.

"ஷல்லு காலையிலே பெயிருவோம்" என.

                                    ஷமா ஷாகுல் ஹமீது 

அதிகாலை 4 மணிக்கு முன்பே ஷல்மானுடன் சென்று விட்டேன் ஷமா ரெஸ்டாரன்ட் நிறைந்து இருந்தது. முதலாளி ஷாகுல் ஹமீது கல்லாவில் அமர்ந்திருந்தார். ஐந்து நிமிட காத்திருப்புக்குப்பின் எங்களுக்கு இடம் கிடைத்தது. ஷமா  ஷாகுல் ஹமீதின் மகன்களும்,பேரன்களும் பம்பரம் போல் உணவு பரிமாறி கொண்டிருந்தனர்.

வெள்ளை சாதமும்,மீன் குழம்பும், பொரித்த மீனும்,ஒரு மோரிஸ்

பழமும் சாபிட்டோம்.

ரசமும், தயிரும் கூட வைத்திருந்தனர். தேவைபட்டோருக்கு சாயாவும் வழங்கினர்.

நான் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது கல்லாவில் இருந்த ஷாகுல் ஹமீது  என்னை அடையாளம் கண்டு கொண்டு புன்னகைத்து கையசைத்தார்.

 பல ஆண்டுகளாக தொடர்ந்து அவர் ரமலானில் ஸகர் உணவு வழங்குவதாக அறிந்தேன்.இவ்வாண்டு முதல் கட்டணம் செலுத்தி உணவு உண்ண விரும்புபவர்களுக்கு  விருப்ப கட்டணம் செலுத்தும் வகையில் ஒரு பெட்டியை கல்லாவில் வைத்திருந்தார்.

ஷல் மானிடம் 100₹ யை கொடுத்து பெட்டியில் போட சொன்னேன்.

ஷமா முதலாளி எனது பீர் முகம்மது மாமாவின் நண்பர் 35 ஆண்டுகளுக்கு முன்பு தனது குழைந்த்சுகளுடன் செருப்பு வாங்க வருவார்.

கடந்த 7 ஆண்டுகளாக வடசேரி பள்ளிவாசலில் தொழுகைக்கு செல்வதால் எப்போதும் அவரை பார்ப்பேன்.

என்னிடம் "டெய்லி வாங்கோ"என அழைத்தார்.

"பாக்க தான் வந்தேன், எப்டி  நடக்குன்னு"என சொல்லிவிட்டு விடைபெற்றேன்.

இளைஞர் இருவர் விருப்ப கட்டண பெட்டியில் பணம் போடுவதை பார்த்தேன்.

ஐந்தே காலுக்கு வடசேரி பள்ளிவாசலில் தொழுகைக்கு சென்ற போது ஷமா ரெஸ்டாரன்ட் குடும்பத்தினர் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பள்ளிவாசலில் நிறைந்து இருந்தனர்.ஷமா ஷாகுல் ஹமீது அவர்களுக்கு ஐந்து மகன்கன் அனைவருக்கும் திருமணமாகி  குழைந்தைகள் இருக்கிறது.

 


 

வெளியூர்களிலிருந்து தங்கி வேலை செய்பவர்கள்,பள்ளிவாசல் இமாம்கள்,மோதினார்கள்.கடைகளில் வேலைபார்க்கும் பணியாளர்கள் மற்றும் சூழல் காரணாமாக சமைக்க இயலாதவர்கள் நிறையபேர் நோன்பு வைக்க இங்கே இலவசமாக உணவு வழங்கபடுகிறது.இன்முகத்தோடு குடும்ப உறுப்பினர்களே பரிமாறுகிறார்கள்.

  இந்த சேவையை வேண்டியவர்கள் பயன்படுத்திகொள்ள வேண்டும்.ரமலானில் செய்யப்படும் நன்மைகளுக்கு கூலியை அல்லாஹ் பல மடங்காக திருப்பி தருவான்.நாகர்கோவில் கெத்தெல் சாகிப்பான ஷமா ஷாகுல் ஹமீது மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு இம்மையிலும்,மறுமையிலும் அல்லாஹ் நன்மையே செய்வானாக.

ஆமீன்.

  ஷாகுல் ஹமீது,

25-march-2023.

No comments:

Post a Comment