Wednesday 25 July 2018

ஆனந்த சந்திரிகையில் ஈராக் போர்முனையில்

  ஆனந்த சந்திரிகையில் ஈராக் போர்முனையில்.

     கடந்த 2016 செப்டம்பர் முதல் டிசம்பர் வரை ஈராக் போர்முனை அனுபவங்கள் என எழுதிய கட்டுரைகள் அமெரிக்காவின் டல்லஸ் நகரிலிருந்து மாதமிருமுறை வெளிவரும் ஆனந்த சந்திரிகை எனும் இணைய இதழில் தொடராக வெளிவருகிறது .
 கடந்த ஏழாம் தியது முதல் கட்டுரை பிரசுரமாகியிருந்தது.

     ஆஸ்டின் நகரில் வசிக்கும் சௌந்திரராஜன் அவர்கள் விஷ்ணுபுர குழுமும்மூலமாகஅறிமுகமானார்.பின்னர் எனது வலைப்பூவில் கட்டுரைகள வாசிக்க ஆரம்பித்தவர் ஈராக் போர்முனை அனுபவங்களை படித்து விட்டு விரிவாக விமர்சனமும் எழுதினார் ,காற்றின் நிழல் எனும் அவரது முகநூல் பக்கத்தில் .அவரே ஆனந்த சந்திரிகைக்கும் என்னை அறிமுகப்படுத்தினார் .


       ஈராக் போர்முனையில்: ஷாகுல் ஹமீது நமது பத்திரிகைக்கு எழுதும் “கன்னி” கட்டுரைத் தொடர் எனலாம். அரபு நாடுகளில் வசிக்கும் இவர் நமது பத்திரிகையில் எழுதும் ஆவலில் இந்தக் கட்டுரைத் தொடரை ஆரம்பிக்கிறார். ஈராக் போரின் போது தாம் நேரில் கண்டவற்றை காண்னொலிக் காட்சி போல் சுவைபட எழுதுகிறார். தொடர்ந்து படியுங்கள்.
https://drive.google.com/open?id=19oop8a70DLoaBjSSdqk7wAh_BKrqkbHA
ஷாகுல் ஹமீது
25-07-2018

No comments:

Post a Comment